நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கையெழுத்திட்டனர்

நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கையெழுத்திட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நடத்தி வருகிறது
இந்த கையெழுத்து இயக்கத்தை கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் அதைத் தொடர்ந்து கோபி தாசில்தார் கார்த்திகேயன்மண்டல துணை வட்டாட்சியர் சாமுண்டீஸ்வரி வருவாய் ஆய்வாளர்கள் ராஜ்குமார் ,கோபால் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கையெழுத்திட்டனர்அதைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஏராளமான மாணவ மாணவிகளும் பொதுமக்களும் பேருந்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர் அதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்ட்டில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

Leave the first comment

மற்ற பதிவுகள்