எல்.பி.பி. வாய்க்கால் 29/4 மைல் ஆண்டவர் மலை அருகில் மெயின் வாய்க்காலின் வலது கரையில் ஐந்து கண் கழிவு நீர் வடிகால் பாலம் (DC) அமைந்துள்ளது. இதில் முதல் கண் வடிகாலில் கான்கிரீட் தளம் போடப்பட்ட பழைய கட்டுமானத்தின் அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது.மேற்படி கசிவு நீரை இன்று பொதுப் பணித்துறையினர் மண் கொட்டி சரி செய்த நிலையில் கசிவு நீர் அப்பகுதியிலிருந்து மீண்டும் கசிந்து வந்ததால் நேற்று வெடிப்புகளிலிருந்து வெளியேறிய கசிவு நீர் பகுதியில் சிறு சிறு குழாய்கள் அமைத்து சிமெண்ட் கலவை மூலம் சரிசெய்து அதிகளவில் நீர் வெளியேறுவதை தடுத்தனர். இன்று அச்சிமெண்ட் கலவைகள் பெயர்ந்துவிட்டதால் மேற்கொண்டு இன்றும் வாய்க்காலில் மண் கொட்டி நீர் கசிவினை ஓரளவுக்கு குறைத்துள்ளனர்.நாளை (25.08.2023) கான்க்ரீட் கலவை இயந்திரங்கள் மூலம் கான்க்ரீட் கலவை போடவுள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் இன்று இரவும் தொடர்ந்து கண்காணிக்கவுள்ளனர்.